About me
வேலூர் மாநகரம் என் தாய் மண்.
நான் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகில் உள்ள மெட்டுக்குளம் என்னும் ஊரில் பிறந்தவன்.எனது பள்ளிப் படிப்பை புனித சவேரியார் பள்ளியிலும், காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரையும் படித்தேன். கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல நான் எனது தொழில்நுட்ப படிப்பை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், அடுக்கம்பாறை படித்தேன். அதன் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் கோயம்புத்தூரில் கம்பெனியில் பணி செய்து 1998 வேலூர் பொறியியல் கல்லூரி மின் ஆய்வக பணியாளராக சேர்ந்து பணியாற்றி வந்தேன். என்னுடைய படிப்பை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலே 2005யில் BTECH- ECE படிப்பை முடித்தேன். 2010தில் முதுகலை பட்டமும் (M.E) பெற்றேன். சென்னையில் உள்ள பல முன்னணி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளேன் . எண்ணிறைந்த மாணவர்கள் கடந்த 20 வருடங்களாக, அவர்களோடு பழகி, அவர்களோடு பயணித்திருக்கிறேன் என்ற முறையில் இந்த ஒரு முயற்சியை மேற்கொண்டு நடத்தி வருகிறேன். இப்போது சென்னையில் வசிக்கிறேன்.
| Leave a Comment |