தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

வெற்றிக்கு முதல் மூலதனம் - தன்னம்பிக்கை.




வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உடையவன் எதிலும் எளிதாக வெற்றி அடையமுடியும்.இமாலய சாதனைகளை கூட அவர்களால் வெல்லமுடியும்.

எந்த பிடிப்பும் இல்லாமல் ஒரு மனிதன்வானளாவிய கட்டிட சுவற்றில் தன் கைகளை மட்டும் பயன்படுத்தி ஏறி சாதனை செய்து விடுகிறான்.அதே போல் உயர்ந்த மலைகளிலும் ஏறி சாதனை செய்ய முடிகிறது. இது எப்படி சாத்தியம் ஆகிறது என்றால் இதற்கு அவனது தன்னம்பிக்கையே தான் காரணம்.மாணவர்களில் கூட தன்னம்பிக்கை உடையவர்கள் தடம் புரளாமல் வெற்றி நோக்கி செல்கின்றனர். தன்னம்பிக்கை இல்லாமல் தன்னையே நம்பாதவன் தடம் புரள்கிறான்.நூற்றுக்கு நூறு மார்க்கு எடுத்து விடுவேன் என்று முயன்று முயற்சி செய்கிறவனின் நம்பிக்கை எண்ணம் உடையவனால் அதை சாகிக்க முடிகிறது.

சிலர் படிக்கும்போதும் ,பரீட்சை எழுதும் போதும் கூட தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். ஒரு சில மாணவர்கள் நம்பிக்கையுடன் படிக்கும்பொது அந்த மாணவர்களிடத்தில் கூட ‘டேய் எவ்வளவு எழுதினாலும் பத்து மார்க்கு கேள்வி பதிலுக்கு எட்டு மார்க்குக்கு மேல் போடா மாட்டார்கள் என்று ஆரம்பத்திலே அவனுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்துவார்கள்.

ஆனால் இப்போது எல்லாம் நூற்றுக்கு நூறுஎன்பது எல்லா பாடங்களிலும் எடுக்க முடிகிறது .அது எவ்வாறு சாத்தியம் எனில் நம்பிக்கை தன்மேல் உள்ள அபார நம்பிக்கை தான் காரணம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் கணிதம் தவிர மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க்கு எடுப்பது என்பது மிகவும் அரிதானதாக இருந்தது.

அதே பாடத்திட்டங்களை சிறிது மேம்படுத்தி தான் இப்போது உள்ளன.ஆனால் மார்க்குகள் மட்டும் எவ்வாறு முழுமையாக கிடைக்கிறது.அது தான் மாணவர்களின் அபார நம்பிக்கை முழு அளவிலான எதையும் குறைக்க முடியாத அளவுக்கு கொடுக்கும் பதில்கள், இதனால் அதன் பயனை முழுமையாக அறுவடை செய்ய முடிகிறது.வாழ்க்கையில் எந்த ஒருநிலையிலும், எந்த ஒரு வயதிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையான உழைப்பும் வெற்றி பெற்று விடுவோம் என்ற அபாரமான தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.


எந்த ஓர் செயலை செய்ய தொடங்கும் போதே ,முடியாது ,சரியாக வராது என்று எண்ணினால் எப்போது நாம் வெற்றி இலக்கை எட்டவே முடியாது.மாணவ பருவத்தில் விளையாட்டு ,படிப்பு போன்றவைகளில் எதை தேர்ந்து எடுத்தாலும் அதில் வெற்றி பெற்று விடலாம் ,சாதிக்க முடியும் என்று நம்பிக்கைய முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.அப்போது தான் அந்த அந்த நிலைகளில் நாம் வெற்றியை சுலபமாக ஈட்டமுடியும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பெரிய தொழில் அதிபர் இயந்திர தொழில் கருவிகள் புதிதாக செய்வதில் கை தேர்ந்தவர்.புதிதாக கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர். அவரது மகன் சிறு வயது இளையவராக இருக்கும் போதே பலசெயல்களை,புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க சொல்லி அவனக்கு நம்பிக்கையூட்டி வளர்த்து வந்தார். பல புதிய கண்டு பிடிப்புகளின் முன்மாதிரிகளை உருவாக்கி அவனையே முடிவு செய்யசொல்லி அவனது தன்னம்பிக்கையை வளர்த்து விடுவார்.

இதனால் அவரது மகன் விரைவிலேயே புதிய கண்டுபிடிப்புகளின் தொழில் நுணுக்கங்களை கற்று தானே எதையும் செய்யமுடியம் என்று நம்பிக்கை கொள்ள வைத்தார்.பணம்,வசதிகள் இருந்தாலும் அவனுக்கு சிறு வயதில் இருந்தே தன்னம்பிக்கையான முறையில் செயல்பட வைத்தார்.அத்துடன் அதே துறையில் நல்ல முறையில் படித்து இன்னும் சிறப்பான முறையில் வாழ்க்கையின் உண்மையை உணரச்செய்ததால் பின்னர் அவர் சிறந்த நிர்வாகியாக ,புதிய கண்டுபிடிப்புகளை தயாரிப்பதில் சிறந்து விளங்கியதை காணமுடிந்தது.

அப்போது நான் படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. எது உன் கனவோ ,எது உன் லட்சியமோ அதற்காக அதை செய்து கொண்டே இரு. உன் பார்வையில், உன் சிந்தனையில் ,உன் பேச்சில் ,உன் செயல்பாட்டில் . உன் வெளிப்பாட்டில் ,உன் உயர்வை நோக்கியே உன் வெற்றியை தியானித்தே உன் லட்சியத்தை சுவாசித்தே ,அணு அணுவாய் அசை அசையாய் நகர்ந்து கொண்டே இரு. ஓய்வின்றி நம்பிக்கையோடு , செயல் பட்டுக்கொண்டே இரு ஜெயித்து விடலாம். இது புதியவர்களுக்கு இளஞ்ர்களுக்கு தன்னம்பிக்கை மிகுந்த வரிகளாக இருப்பதை காணமுடிந்தது.

ஒருசிலர் எந்த காரியத்தை செய்யத் தொடங்கினாலும் உன்னால் முடியாது ,வீண் முயற்சி செய்யாதே என்று தடங்கள் செய்வதுடன் அவனது நம்பிக்கையை எண்ணத்தை ஆரம்பத்திலே மழுங்கச் செய்துவிடுவார்கள்.

சாதாரணமாக விளையாட்டு வீரர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு சத்தான உணவு,முறையான உடற்பயிற்சி என்று பல பயிற்சி கள்கொடுபார்கள். இது தவிர முக்கியமாக மனத்திற்கு புத்துணர்ச்சி தரும் ,நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளை கூறி அவர்கள் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கை உணர்வை ஊட்டுவது பயிற்சியாளர்களின் முக்கிய கடமை ஆகும்.

பொதுவாக களத்தில் அது விளையாட்டு ஆடுகளமாக இருந்தாலும் சரி, போர்க்களமாக இருந்தாலும் சரி, தொழில் துறையில் போட்டி களமாக இருந்தாலும் சரி அது எத்தகையக களமாக இருந்தாலும் எதிரியின் செயல்பாட்டை கண்டு பயப்படாமல் மனதில் தைரியம் ஏற்படுத்தி கொண்டு , எதிரி எனக்கு சாதாரனமானவனாகத்தான் தெரிகிறான். இவனை நான் வீழ்த்தி விடுவேன் என்று மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டால், அது தான் வெற்றியின் முதல் படி..பாதி வெற்றி அப்போதே உங்கள் பக்கம் வந்து விடும்.


வெற்றி அடைய வேண்டும், அதை எப்படி அடைவது என்று யாருக்குத்தான் தெரியும். வெற்றி அடைய என்ன தகுதியோடு செல்லவேண்டும் ,என்று யோசித்தேன். அப்போது இயற்கை நீதி ஒன்றை மட்டும் தெளிவாக சொன்னது.ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் என்று ,அது என்ன தகுதி ?



உலகில் வெற்றி பெற்ற அனைவரும் ஒரு பக்கம்தோல்வி அடைந்த அனைவரும் ஒரு பக்கம் ,தராசில் வைத்து நிறு த்துப்பார்ப்போம். பணக்காரனும் தோற்று இருக்கிறான் ,ஏழையும் வென்றிருக்கிறான். எனவே, பணம் தடை இல்லை. படித்தவனும் தோற்றிருக்கிறான் ,பாமரனும் வென்றிருக்கிறான். எனவே, படிப்பு தடை இல்லை. வீரனும் தோற்று இருக்கிறான் ,கோழையும் வென்று இருக்கிறான். எனவே பலம் தடை இல்லை. புத்திசாலியும் தோற்று இருக்கிறான், முட்டாளும் வென்று இருக்கிறான். எனவே அறிவு தடை இல்லை. ஆற்றல் படைத்தவனும் தோற்று இருக்கிறான் ,ஊனம் உடையவனும் வென்று இருக்கிறான். எல்லாம் இருந்தும் தோற்றவர்களும் இங்கு இருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் வென்றவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஒன்று மட்டும் தான் இவர்களை பிரித்து காட்டுகிறது ,அது மட்டும் தான் வெற்றியை பெற்றுத்தருகிறது. 

அது நம்பிக்கை, தன்னம்பிக்கை தோற்றுப்போன எவரிடமும் இல்லாத ஒன்று நம்பிக்கை வெற்றி அடைந்த அனைவரிடமும் இருந்த ஒன்றே ஒன்று நம்பிக்கை அந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் அது எல்லாவற்றையும் பெற்றுத்தரும் வெற்றியை அது மட்டுமே பெற்றுத்தரும் நீயும் வெற்றி அடைவாய் ,நம்பிக்கையோடு இரு இது ஒரு நம்பிக்கை தரும் அருமையான கவிதை.

ஒரு கிராமத்தில் பெரிய, சிறிய வயதுடைய பல சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.அதில் பெரிய பையன்கள், சிறிய பையன்கள் எல்லோரும் இணைந்து பல விதமான விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு இருந்தனர்.கிராமத்தில் உள்ள மரங்களில் ஏறுவது,குதிப்பது என்றும் ஆடிப்பாடிக்கொண்டு இருந்தார்கள் ,சிலர் பயத்தில் மரத்தில் ஏற மறுத்து விட்டனர்.

அப்போது ஓரிடத்தில் ஒரு ஓடையை கடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது ஓடையின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி இருக்கும் ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டு இருந்தது.ஓடையை சில சிறுவர்கள் அனாவ சியமாக தாண்டிக்குதித்து சென்றனர்.ஆனால் ஒருசில சிறுவர்கள் பயந்த சுபாவமாக இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து விடுவோமோஎன்ற பய உணர்வில் தாண்டிக்குதிக்க மறுத்து விட்டனர்.

எதிர் கரையில் இருந்தவர்கள் உற்சாகமூட்டியும் அவர்கள் தாண்டிக்குதிக்க வில்லை.அதற்கான முயற்சியை கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை.சிறிது தூரம் நடந்து சென்று தண்ணீர் குறைவாக சென்ற இடத்தில் இருந்து ஓடையை கடந்து மறு பக்கம் சென்றனர்,சிறுவர்களில் பலர் அபார தன்னம்பிக்கை மிக்கவர்களாக காணப்பட்டார்கள். எதையும் செய்து பார்த்து விடலாம் என்ற அதீத தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு விளங்கினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

இங்கே சில சிறுவர்களுக்கு போதிய தன்னம்பிக்கை அவர்களிடத்தில் இல்லை .நம்பிக்கையுடன் நாம் தாவி குதித்து விடுவோம் என்ற எண்ணம் ஏற்படாததால் அவர்கள் ஓடையை தாவிக்குதிக்க முடியவில்லை .

எனவே எதிலும் வெற்றி பெற முதலில் தன்னம்பிக்கை அவர்களுக்குள்ளே ஏற்படவேண்டும்.ஒவ்வொருக்கும் முதலில் தேவை தன்னம்பிக்கையும் மனதைரியமும் தான்.இவைகள் வெற்றியை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகும்.

சமீபத்தில் ஒரு நாள் காலையில் தினசரி பத்திரிக்கை ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தேன்.இரண்டு மூன்று பக்கங்களை புரட்டியவுடன் ஒரு செய்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டு இருந்தது.நன்றாக படித்து ,பெர்ய அளவல் தேவைக்கு அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது செய்தி.அவரது புகைப்படத்தை பார்க்கும் போது மிக அழகாக இருந்தது.நிறைய படித்து நல்ல வேளையில் இருந்த இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.அதற்கான காரணமும் பத்திரிகையில் இல்லை.அந்த செய்தியை பார்த்துவிட்டு மேலும் சில பக்கங்களை புரட்டியபோது ஒரு பக்கத்தில் ஒரு விவசாயின் புகைப்படத்தை போட்டு வேளாண் உற்பத்தியில் சாதனை செய்துள்ளார் என்றும் ,அதற்கான அரசின் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த செய்தியில் ஒரு குறிப்பட்ட ரக நெல் உற்பத்தியில் அரசின் குறியீட்டு அளவை விட கூடுதல் விளைச்சல் செய்து காட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது.அந்த விவசாயிக்கு எழுதப்படிக்க மட்டும் தான் தெரிந்துள்ளது.அதுவும் தாய் மொழியல் மட்டும் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த இரண்டு செய்திகளையும் படித்த போது எனக்கு ஒன்றுதான் தெரியவந்தது.படிப்பு, அழகு, கைநிறைய வருவாய் இருந்தும் அவர் விரும்பிய வாழ்கையை அமைத்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தும் அவர் நிம்மதியாக வாழவில்லை. அப்படி என்றால் அவர் வாழ்க்கையில் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ அதைகற்றுக் கொள்ளவில்லை .அது தான் தன்னம்பிக்கை..வாழ்க்கையில் எது வந்தாலும் அதை எதிர்க்க துணிந்த மனநிலை நம்பிக்கையான மனம் அதை அவர் வளர்த்துக்கொள்ளாததால், எதோ ஒரு சின்ன பிரச்சினையை ஏற்பட்டுள்ளது.அதை கூட தாங்க முடியாமல் உயிரை போக்கிக்கொண்டுள்ளார். வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு எப்போதும் தன்னம்பிக்கை மிகுந்து காணப்பட வேண்டும். அப்போது தான் எதையும் எதிர் கொள்ளும் மன நிலையை உருவாக்கி தரும்.

அதே சமயம் அதிகம் படிப்பறிவில்லாத விவசாயிக்கு அரசின் விவசாய அறிவிப்பு தெரியவந்துள்ளது.இந்தப்பரிசை பெறவேண்டும் என்ற தன்னம்பிக்கை, நாம் எப்படியும் இதை அடைந்தே தீருவோம் என்ற உறுதி அவருக்கு இருந்துள்ளது.அதனால் அவர் உறுதியான நிலையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.அதற்கு காரணம் அவரது தன்னம்பிக்கை தான் என்று உறுதியாக கூறமுடியும்.

சாதனை விவசாயி இது பற்றி தெரிவிக்கும் போது,’நான் இந்த முயற்சியில் இறங்கும் போது பலர் என்னை கிண்டலும் கேலியும் செய்தனர். ‘ஏம்பா வீண் வேலை அதிகாரிகள் சொல்கின்ற அளவுக்கு மகசூல் எதுவும் கிடைக்காது.,அவர்கள் பாட்டுக்கு சொல்லிவிட்டு போய் விடுவார்கள் என்று கூறினார்கள் .

ஆனால் வேளாண் அதிகாரிகள் எனக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறி எவ்வாறு செயல்படவேண்டும் என்றும் ,அவ்வப்போது தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.அவர்கள் கூறிய வழி முறைகள் எனக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.நாம் எப்போதும் விவசாயம் செய்யப்போகிறோம் அதிகாரிகள் கூறிய முறையில் செயல்பட்டு இந்த முறை வெல்வது என்ற ஒரே குறிக் கோளுடேன் நான்கு,ஐந்து மாதங்கள் தீவிரமாக செயல்பட்டதால் அவர்கள் அறிவித்த அளவை விட அதிகமாக விளைச்சல் செய்து காட்டினேன்.அதிகாரிகளே அதைபார்த்து வியந்து பாராட்டு தெரிவித்தார்கள்..இந்த முயற்சியில் எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை அது தான் தன்னம்பிக்கை.

எனவே இதில் இருந்து என்ன தெரிகிறது தற்கொலை செய்து கொண்டவர் மிகுந்த படிப்பறிவு மிக்கவராக இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர் ஒரு மோசமான முடிவை மேற்கொண்டார்.அதிகம் படிக்காத ஒருவர் எதையும் தன்னம்பிக்கை உணர்வுடன் செயல் பட்டதால் வெற்றி பெற்றார்.எனவே வாழ்க்கையின் திறவு கோளாகஇருப்பது மனிதர்களுக்கு தன்னம்பிக்கை ஒன்றுதான் அதில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் வென்று காட்டலாம் இரு உறுதி.பொதுவாக ஒருவர் புதிதாக எதை செய்தாலும் தொடங்கும் முன் முட்டுக்கட்டை போடுவது போல் பேசுவது,நம்பிக்கை அற்ற வார்த்தைகளை கொட்டுவது நம்மில் பலருக்கு கைவந்த கலை.அவருக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு தொடக்கத்திலே அவர் மன தைரியத்தை தகர்த்து விடும் முறையில் பேசுவது பலரின் நிலை. ஒருசிலரே அவர்களை நம்பிக்கை கொள்ளும் வகையில் கருத்துக்களை கூறுவார்கள்.தொடக்க நிலையில் சிலர் ,இதையா செய்யப்போறே ,இந்த துறையிலே பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் உள்ளனர். நீ என்னத்தை புதுசா செய்யப்போறே ,இதை விட்டு விட்டு வேறு வேலையைப் பார் என்று கூறுவதை நாம் பல சமயங்கில் பார்த்து இருக்கலாம். எதிலும் நாமும் முயன்றால் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை-அது தான் தன்னம்பிக்கை உணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம் பக்கம் தான்.


| Leave a Comment |