தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

மெய் சொல்லல் நல்லதப்பா

மெய் சொல்லல் நல்லது.

மெய் சொல்லல் நல்லதப்பா -  தம்பி
சொல்லல் நல்லதப்பா 
                     
                   கண்டதை சொல்லென்று சொன்னாலும் -  நீ 
                     உன் கதை சொல்ல என்று சொன்னாலும் 
                     மண்டையை உடைத்து விட வந்தாலும் 
                    பொருள் கொண்டு வந்து உன்னிடம் தந்தாலும்

 மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி
 மெய் சொல்லல் நல்லதப்பா
                  
                  பின்னவன் கெஞ்சியும் என்றாலும் அன்று 
                  முன்னவன் அஞ்சிட நின்றாலும் 
                  மன்னவரே எதிர் நின்றாலும்
                  பின்னவரே என்று சொன்னாலும் - நீ 
மெய் சொல்லல் நல்லதப்பா -  தம்பி
 சொல்லல் நல்லதப்பா 
                                                      பாவேந்தர் பாரதிதாசன்.


| 1 comment |