தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

தன்னம்பிக்கை - தேவையா?.








தன்னம்பிக்கைக்குத் தேவையானதும்  அ வசியமானதும்!
தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட் டாலும் கீழ்கண்ட எளிய முறைக ளை நாம் பின்பற்றினால் நமது லட் சியத்தை எளிதில் எட்ட முடியும்.

ஆடை

உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பலவாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நி லைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ் டைலுக்கு மாறி னால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கப்படு த்தும் குணம் நாம் அணியும் ஆடைகளு க்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்த வும்.


வேக நடை

அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்றுதா னே நினைக்கிறீர்கள். ஒருவரதுநடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறா ரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமா ன நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியு ம் என்றநம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றி லிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமா ன நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்த நிலை

எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களைதொங்கிய படியே வந்தால் அவ ரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமி ர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பி க்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல் லும் குணமா கும். பார்ப்பவருக்கும் நாம் நல்ல தன்னம்பிக்கை உடையவர் என்ற உணர்வை உண்டாக்கும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிற்பது நல்லது.



கேட்பது







கேளுங்க! கேளுங்க! நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பே ச்சை அடிக்கடி கேட்கவும். 30 – 60 நொடிக்குள் உங்க ளது லட்சியம் மற்றும் எதி ர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்த மாக பேசி பழகுங்கள். அல் லது எவ்வப்போது தன்னம் பிக்கையை தூண்டவேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.

நன்றி

உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடை த்திருக்கும்.அவற்றை பட்டியல் இடுங் கள். அது உங்களது படிப் பாக ட்டும், உ ங்களதுதிறமையாகட்டும், நல்ல உற வாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய விஷயங்கள் நம் வாழ் வில் நடந்து உள்ளது என்பது தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ உதவியாக இருக்கும்.

மனதார பாராட்டுங்கள்



நம்மை நாமே “நெகட்டிவ்”வாக நினைக்கும் போது, மற்றவர்களை பார்ப்பதும்,பேசுவதும் கூட நெகட்டிவ் வாக இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில்மற்றவர்களை மனதார பாரா ட்டக் கற்றுக் கொள் ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங் கள், மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்ற வர்களுக்கு பிடித்துப் போகும். இதனா ல் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கு ம். மற்றவர்களின் நல்ல குணாதிசய ங்களை காணும் போது, நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங் களும் தானே தெரியவரும்.

முன்னாலே

பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும்போது, எப் போதும் பின் இருக்கையில் அமர வே விரும்புவர். இது தன்னம்பிக் கை குறைபாடாகும். ஆகவே இனி மேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் உங்கள் மனதில் உள்ள பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.

பேசுங்க
சிலர் பலர் கூடி இருக்கும் போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத் து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதி ல் பட்டதை தைரியமாக சபைக ளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக் கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வர். எல்லோ ரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக் கை உங்களை தேடி,ஓடி வரும்.

உடல்வாகு

நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கு ம். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம் மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டா ல், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!

நாடு
நாடென்ன செய்தது நமக்கு… என கேள்விகள் கேட்பது எதற்கு? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று சற்று சிந்தித்தால் பலன் கிடைக்கும். நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்கக்கூடாது . நம்மை சுற்றி உள்ளவர்கள் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் சிந்தித்து, நம் மை ஈடுபடுத்திக் கொண்டால், தன்ன ம்பிக்கை வளரும். இதனா ல் ஏற்படும் தன்னம்பிக்கை நமது எல்லாத் திற னையும் வெளிக்காட்ட உதவியாக இருக்கும் என சொல்லவும் வே ண்டுமோ?

இவற்றை நாளைக்கு என தள்ளிப் போடா மல் இன்றே “இன்ஸ்டண்ட்’ முடிவு செய்து, துவக்குங்கள். 




| Leave a Comment |