தேனீயின் தன்னம்பிக்கை.
ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது. "ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய் . ஆனால் மனிதன் அந்த தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான். அதற்காக நீ வருந்துவதில்லையா?. அதற்கு தேனீ பதிலளித்தது. "இல்லவே இல்லை. ஏனென்றால் மனிதன் என்னிடம் இருந்து தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் தேனை உண்டாகும் கலையை ஒரு போதும் அவன் என்னிடம் இருந்து திருட முடியாது". என்ன ஒரு மனோ உன்னதமான மனப்பான்மை. இந்த மனப்பான்மை தான் நமது தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |