இந்தியாவின் இரும்புப் பெண்மணியாகக் கருதப்படும் இந்திரா காந்தி, நாட்டின் பிரதமராக இருந்த போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் எண்ணற்ற முடிவுகளை துணிச்சலாக எடுத்தவர்.
உலகின் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றது, மாரி கியூரி தான். புற்று நோய்க்கு சிகிச்சைக்கு மாரியின் கண்டுபிடிப்புகள் தான் ஆரம்பம். தன் வாழ்வை அறிவியலுக்காகவே அர்ப்பணித்த மாரி கியூரி, வரலாறு காணாத விஞ்ஞானி என்று போற்றப்படுகிறார்.
ஹாரி பாட்டர் நாவலையோ அல்லது அதனை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தையோ கேள்விப்படாதோர் இருக்க மாட்டார்கள். இதனை படைத்தவர் ஜே. கே. ரவுலிங். வறுமையின் சூழலில் சிக்கி தவித்து, எழுதுவதற்கு ஒழுங்கான இடம் கூட கிடைக்காமல் சிரமப்பட்ட ஜே. கே. ரவுலிங், எண்ணற்ற நிராகரிப்புகளை தாண்டியே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.
தன்னம்பிக்கையின் சின்னம்
|
Leave a Comment
|