தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

மகிழ்ச்சிக்கனிகள்



மகிழ்ச்சிக்கனிகள் - அபூர்வம் தான்.

"சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் - மற்றவரைசந்தோஷப்படுத்தி பார்ப்பதில் தான் இருக்கிறது" என்று ஒருதிரைப்பட இயக்குனர் சொன்னது - ஒரு வசனமாகவே பலராலும்புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. வாழ்க்கையாகசெயல்படுத்தப்படவில்லை.

பலரின் சிரிப்பு அடுத்தவர் கீழே விழுந்தால் வருகிறது.
அடுத்தவர் கஷ்டப்பட்டால் வருகிறது.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் "சாகச சிரிப்புதொடங்கி சங்கீத சிரிப்பு "வரை பலப்பல வகைகளை நமக்கு செய்தேகாட்டிவிட்டார் - தனது பாட்டில்.

நம் சிரிப்பு எந்த வகை என்று என்றைகாவது நினைத்துபார்த்திருக்கிறோமா?

கடைசீயாக நாம் சிரித்தது எப்போது ? எப்படி ? எதனால் ?

அந்த சிரிப்பினால் மனதுக்கு மகிழ்ச்சி வந்ததா?
அப்படி வந்தால் - அந்த மகிழ்ச்சி நீடித்த, நிலையான மகிழ்ச்சியா?

இன்றைய பொருளாதார சுமையில் - காசு, பணம், துட்டு, மணி, மணி -என்ற பாடல் மட்டுமே பலரின் தேசிய கீதமாக ஆகி விட்ட நிலையில்,யார் என்ன கேட்டாலும் கொடுக்க மனம் இல்லாத நெஞ்சனாக,கஞ்சனாக பலர்.

மல்லிகை - மலர்ந்து, தான் இருக்கும் சுற்றம் முழுவதும் ஒருமணத்தை பரப்பி நிறைவை தருகிறது.
அது அனைவருக்கும் பிடிக்கிறது.

அதேபோல, நீங்கள் மனம் நிறைந்த சிரிப்பில் - உங்கள் சுற்றத்தைமகிழ்ச்சிக்கூட்டமாக மாற்ற முடிந்தால் - நீங்கள் பலராலும்விரும்பப்படுவீர்கள்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.




| Leave a Comment |