தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

மனம்விட்டு சிரித்த சிரிப்பு



தொலைகாட்சியில் "Crazy Mohan"- Prakash Raj இடம் "HOW DO I KNOW SIR? " என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

மற்றொன்றில் வடிவேல் "நான் அடி வாங்காத ஏரியாவே கிடையாது"" -என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

இன்னொன்றில் விவேக் எப்படி இருந்த நான் - இப்படி ஆயிட்டேன்"என்று நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் ஒவொருவருக்கும்இருக்கத்தான் இருக்கிறது.

90 களில் - கோவில் ஒரு நாள் Humour Club நிகழ்ச்சியில் திரு.தென்கச்சி அவர்களின் நகைச்சுவை பேச்சை இப்போது என் மனம்அசை போட துவங்குகிறது.

அரங்கம் நிரந்த அந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு நாற்காலியில் மனம்விட்டு சிரித்த சிரிப்பு - இன்னும் பசுமையாக நினைவில்.

நகைச்சுவை புத்தகங்கள் மட்டும் அல்ல , நகைச்சுவை பற்றியபுத்தகமும் நமக்கு அறிய தகவல்களை அள்ளி தருகின்றது.


ஒரு குழந்தை ஒரு நாளைக்கு எதனை முறை சிரிக்கிறது என்றகணக்கு தொடங்கி, முதியவர்கள் ஒரு நாளைக்கு சிரிக்கும் சிரிப்புவரை - பட்டியலிடிருந்தார்கள்.
காரணத்தையும் விளக்கி, சிரிப்பின் முக்கியத்துவத்தையும் கூட.


வள்ளுவர் கூட "இடுக்கண் வருங்கால் நகுக"என்று சொன்னார்.
ஆனால், நாம் அதை சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தால் -கவியரசரும் "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று நமக்குஞாபகப்படுத்தினார்.


இன்னும் நிறைய மனிதர்கள் அதை கடைபிடிக்காத காரணத்தாலோஎன்னவோ - இன்றைய சமூகம் வன்மம், குரோதம், காழ்புணர்ச்சி,போன்ற "காய்களையே விளைவித்து கொண்டிருக்கின்றது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.



| Leave a Comment |