மனம்விட்டு சிரித்த சிரிப்பு
தொலைகாட்சியில் "Crazy Mohan"- Prakash Raj இடம் "HOW DO I KNOW SIR? " என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
மற்றொன்றில் வடிவேல் "நான் அடி வாங்காத ஏரியாவே கிடையாது"" -என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
இன்னொன்றில் விவேக் எப்படி இருந்த நான் - இப்படி ஆயிட்டேன்"என்று நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் ஒவொருவருக்கும்இருக்கத்தான் இருக்கிறது.
90 களில் - கோவில் ஒரு நாள் Humour Club நிகழ்ச்சியில் திரு.தென்கச்சி அவர்களின் நகைச்சுவை பேச்சை இப்போது என் மனம்அசை போட துவங்குகிறது.
அரங்கம் நிரந்த அந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு நாற்காலியில் மனம்விட்டு சிரித்த சிரிப்பு - இன்னும் பசுமையாக நினைவில்.
நகைச்சுவை புத்தகங்கள் மட்டும் அல்ல , நகைச்சுவை பற்றியபுத்தகமும் நமக்கு அறிய தகவல்களை அள்ளி தருகின்றது.
ஒரு குழந்தை ஒரு நாளைக்கு எதனை முறை சிரிக்கிறது என்றகணக்கு தொடங்கி, முதியவர்கள் ஒரு நாளைக்கு சிரிக்கும் சிரிப்புவரை - பட்டியலிடிருந்தார்கள்.
காரணத்தையும் விளக்கி, சிரிப்பின் முக்கியத்துவத்தையும் கூட.
வள்ளுவர் கூட "இடுக்கண் வருங்கால் நகுக"என்று சொன்னார்.
ஆனால், நாம் அதை சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தால் -கவியரசரும் "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று நமக்குஞாபகப்படுத்தினார்.
இன்னும் நிறைய மனிதர்கள் அதை கடைபிடிக்காத காரணத்தாலோஎன்னவோ - இன்றைய சமூகம் வன்மம், குரோதம், காழ்புணர்ச்சி,போன்ற "காய்களையே விளைவித்து கொண்டிருக்கின்றது.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |