தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

ஆறு கற்பிக்கும் பாடம் - 4



நான்காம் பாடம் புதுப்பித்தல்! பழம்பெருமை பேசுவதிலும் பழம்பெருமையில் அகம் மகிழ்வதிலும் ஆற்றுக்கு உடன்பாடில்லை. ஆறு ஒவ்வொரு மணித்துளியும் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை தன் கடமையாகக் கொண்டிருக்கிறது. நேற்று இருந்த ஆற்றுநீர் இன்று இருப்பதில்லை. சென்ற மணித்துளியில் இருந்த ஆறு இன்று இருப்பதில்லை. ஆறு கடந்து வந்த பாதையை மறப்பதுமில்லை. அதற்காக இன்றைய பொழுதைத் துறப்பதுமில்லை. மனிதராகிய நாம் கடந்த காலவரலாற்றில் திளைத்து எதிர்காலச் சிந்தனையில் மூழ்கி நிகழ்கால º¢கரங்களை இழக்கிறோம்! இந்நிலை மாற வேண்டுமாயின் நாம் ஆறாக வேண்டும்.

                                                                                                                          .............தொடரும் 


இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.



| Leave a Comment |