தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

திறந்த மனம் வெற்றியின் விளைநிலம்.




படிக்கப் படிக்க மனம் விரிவடையும், திறந்த மனம் வெற்றியின் விளைநிலம்.

பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது.
குள்ளம் தான் உயர்வினை வடிவமைக்கிறது.
இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது.

தவறு செய்வது தவறல்ல. திருத்திக் கொள்ள மறுப்பது தவறு.

ஒரு பக்கம் நீங்கள் கை கொடுத்தால் இன்னொரு பக்கம் உங்களுக்கு கை கொடுக்கும்.

வெற்றி ஓர் அனுபவம் என்றால் தோல்வியும் ஓர் அனுபவமே. தோல்வி எனப்படுவது வெற்றிக் செலுத்தும் காணிக்கை அவ்வளவு தான். அதற்காக உற்சாகம் இழக்கத் தேவையில்லை.

உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்கத் தயங்கிக் கொண்டேயிருந்தால் தோல்வியைத் தழுவ நேரும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, இவ்வைந்தும் வெற்றியின் ரகசியங்கள். எதில் ஈடுபட்டாலும் மனஉறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக் கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.

முயற்சி முயற்சி இவை கூடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை கூடக் கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும்.

முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது.

நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கையே.


எப்போதும் ஒருவருடைய இதயம் ஈரமாகவே இருக்கட்டும். அப்போது தான் குடும்ப இதயமே ஈரமாக இருக்கும். குடும்ப இதயயே ஈரமாக இருந்தால் சமுதாய இதயம் ஈரமாக இருக்கும்.

நம் உடலும் உயிரும் போல நம் எண்ணமும் செயலும் இருக்கட்டும். எப்படியாவது வாழ்ந்து விடுவோம் என்று எண்ணுவதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழுவதே வாழ்க்கை. எப்போதும் புன்சிரிப்போடு இருப்பது நல்லது.


| Leave a Comment |