தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்



தன்னம்பிக்கை ஒரு மனிதரை தன்னம்பிக்கை மிக்கவர் என்று நாம் சொல்லுகிறோம் என்றால் அவர் எந்தச்சூழலிலும் எந்த புதிய இடத்திலும் தன் சமநிலையை (Balanced State of Mind) தவறவிடாமல் மனதில்துளியும் அச்சமில்லாமல் மிக எளிதில் அந்தச் சூழலில் அந்த இடத்தில் நடத்திக்கொள்ளும் ஆற்றல்மிக்கவர் என்று பொருள் கொள்ளலாம். ஆங்கில அகராதியில் self–confidence என்றசொல்லிற்குபொருளைப் படித்துப் பார்த்தால் Belief in one’s own abilities என்றிருக்கிறது. அதாவது ஒருவர் தன்திறமைகளின் ஆற்றல்களின் மேல் வைத்துள்ள நம்பிக்கை.

அவரால் எந்தச் சூழ்நிலையிலும் அசௌகரியமாக உணராமல் சௌகரியமாக (Comfortable) உணர்கிறார்என்று பொருள். அவருடைய Comfort zone எல்லை பரந்து விரிந்திருக்கிறது.உங்கள் தன்னம்பிக்கையைஉயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய Comfort Zone எல்லையை மேலும் மேலும்விஸ்தரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இந்த உங்களின் Comfort zone எல்லையை அதாவதுஉங்களின் தன்னம்பிக்கை அளவை எப்படி அதிகரித்துக் கொள்வது?

உங்களின் தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய, தலையாயவிஷயங்கள் என்னவென்றால்…
அறிவாற்றல் (Knowledge) பெருக்கிக் கொள்ளல்
செயலாற்றல் (Functional Skill) வளர்த்துக் கொள்ளல்
நேர்மறை மனோபாவம் (Positive Mental Attitude) உருவாக்கிக் கொள்ளல்.
ஒரு வரைபடத்தின் மூலம் இந்த தன்னம்பிக்கை வளர்ச்சியை புரிந்து கொள்ள முயல்வோம்.

இதன் அடிப்படையில் தான் கல்வி முறையை உருவாக்கிய அறிஞர்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள்வாயிலாக அறிவாற்றலைப் பெருக்கு வதற்கும், பெற்றஅறிவை, கற்ற செய்திகளை வாழ்க்கையில்பயன்படுத்தி வெற்றி காண்பதற்காக செயலாற்றலை வளர்த்துக் கொள்ள கல்வித் திட்டத்தில்சோதனைச்சாலை செயல்முறைப் பயிற்சிகளும், தொழில்முறை பழகுனர் பயிற்சிக்கால பணியும், மாதிரிதிட்ட அல்லது துறைசார்ந்த திட்ட அறிக்கைகள் தயாரித்தல், பணியிடங்களை பார்வை செய்தல் முதலியசெயலாற்றல் வளர்ச்சி பயிற்சிகளும் உள்ளன.

துரதிஷ்டவசமாக நேர்மறை மானோபாவத்தை Positive Mental Attitude (PMA) எப்படி வளர்த்துக்கொள்ளுவது என்பதைப் பற்றி எந்த பல்கலைக் கழகங்களும் பாடத்திட்டம் வைத்திருக்கவில்லை.ஒவ்வொருவரும் அவர்களாக பாடத்திட்டம் வைத்திருக்கவில்லை.

 ஒவ்வொருவரும் அவர்களாகவேவாழ்க்கையில் பட்டறிவின் மூலம் இந்த மானோ பாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாகஇருக்கிறார்கள்.
நேர்மறை மனோபாவம் என்பது எல்லா செயல்பாடுகளிலும் நன்மை தரத்தக்கவைகளையே பார்க்கிறமனபாவம். Try toProfit out from the Loses என்பது போல சாதகமற்றவைகளில் சாதகமானஅம்சங்களை பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய பழக்கத்தில் “புத்திக்கொள்முதல்”என்று ஒரு வழக்குச் சொல் பழக்கத்திலிருக்கிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் ஒரு செயல்பாடுஎதிர்பார்த்த பலனைத் தராதபோது அந்த அனுபவம் நமக்கு ஒரு அறிவூட்டும் அனுபவமாக ஆகிறபோதுஅது நமக்கு “புத்திக் கொள்முதல்” தானே.

நீங்கள் எவ்வளவுதான் அறிவாற்றலிலும், செயலாற்றலிலும் திறமைசாலியாக இருந்தாலும் இந்தநேர்மறை மனோபாவம் இல்லையென்றால் வெற்றி பெறவியலாது. வாழ்க்கையின் தலையாயஇலட்சியமாக “ஆனந்தம்” என்பதை அனுபவிக்கவும் இயலாது.

அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள “ஆர்வத்தை உருவாக்குங்கள்” புதியன அறிந்து கொள்ள வேண்டும்என் “Inquestive Nature” உங்கள் பண்பாக மாறட்டும். புத்தகங்களை நேசியுங்கள். நிறைய வாசியுங்கள்.ஒரு Intellectual Personality (அறிவார்ந்த ஆளுமை)யை வளர்த்துக்கொள்ளுங்கள். கற்றவர்களோடும்.நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்களது இல்லத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்குங்கள். வாசித்தவிஷயங்களை நண்பர்களோடும் அறிஞர்களோடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்கலந்துரையாடுங்கள்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |