தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை


மாற்றங்கள் ஏமாற்றங்களிலிருந்துதான் பிறக்கின்றன. தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், எதார்த்த வாழ்வில் நம்முடைய எதிர்பார்ப்பு களுக்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள நம்மால் முடிவதில்லை. அதைக் கடந்து வர முடியாமலும் அவதிப்படுகிறோம்.

அத்தகைய சிக்கலான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான உளவியல் அறிஞர்களின் ஆலோசனைகள் இவை. பின்பற்றுங்கள்... ஏமாற்றங்களைக் கடந்து சென்று வெற்றிப் படியேறுங்கள்!

மனநிலையை சமன்படுத்துங்கள்

முதலில் கொந்தளிப்பான மனநிலையில் இருந்து மாறி சமநிலையாக மனதைக் கொண்டு வாருங்கள். பிரச்னையின் தீவிரம், கால அளவை கணக்கில் கொண்டு அதற்கான வழிமுறைகளை யோசியுங்கள். குறிப்பிட்ட கால அளவில் தானாகவே சரியாகிவிடக்கூடிய பிரச்னை என்றால் அதன் வழியில் விட்டுவிடலாம். பிறரிடம் சொல்வதால் தீரக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் நெருங்கியவரிடம் பகிர்ந்துகொள்ளலாம். வெளியில் காட்ட முடியாத உணர்வுகள் என்றால், ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைக்கலாம்.

இதன்மூலம் கோபம், இயலாமை மற்றும் விரக்தியை குறைத்துக் கொள்ள முடியும். அதேநேரம் சமூக வலைதளங்களில் உங்களின் ஏமாற்றங்களைக் கொட்டுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏமாற்றம் நிகழ்ந்த கணத்தில் உங்களது வாழ்வில் கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுக்கு நன்றி சொல்லுங்கள்.

எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளவும் இதன்மூலம் உளவியல்ரீதியாக பயிற்சி பெற்றுக் கொள்வது எதிர்கால ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும். பாதகம், சாதகம் இரண்டு சூழலுக்கும் தயாராக இருக்கும்போது நல்லது.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |