தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

தன்னம்பிக்கை தூளாவதா?

யானை பலம் தும்பிக்கை

மனித பலம் தன்னம்பிக்கை!

கேலி கிண்டல் கண்டு

தன்னம்பிக்கை தூளாவதா?

நாம் தன்னம்பிக்கை தளராமல்

முயற்சியோடு பயிற்சி செய்து

முன்னேறிக் காட்ட வேண்டும்!


மரியாதை தரும் பழக்கம்

தமிழருக்கு குல வழக்கம்!

இதற்கு ஏன் சுணக்கம்?

இருகை கூப்பி வைப்போம் வணக்கம்!

நாம் அன்னை தந்தை மட்டுமின்றி

ஆசான் இறைவன் மட்டுமின்றி

மாற்றாரிடமும் கொள்வோம் இணக்கம்!


தனித்தன்மை இல்லா மனிதன்

உலகினிலே யாரும் இல்லை!

உள்ளத்தின் ஒருமைப்பாட்டில்

ஒளிந்துள்ளது வெற்றியின் சாவி!

நாம் தன்திறமை அறிந்து கொண்டால்

தவறுகளை திருத்திக் கொண்டால்

வெற்றி மேல் வெற்றி வரும்!


நொடிப்பொழுதும் வீணாக்காமல்

நேர்மையாக உழைத்துப் பாரு!

உழைத்து பார்க்கும் போது

தலை தானாய் நிமிரும் பாரு!

நாம் சூழலுக்கு ஏற்றாற் போல்

நேர்மறையாய் முடிவெடுத்தால்

தோல்வி தூர ஓடும் பாரு!


நமக்கு எது பிடிக்குமென்று

நமக்குத்தானே நன்றாய் தெரியும்!

பிடித்ததை விடாப்பிடியாய்

பிடித்துக் கொண்டாலே வெற்றி வரும்!

நாம் வெற்றி அடைந்தாலும்

தோல்வி அடைந்தாலும்

சுயமுடிவு எடுத்திட வேண்டும்!

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |