தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

முயன்றால் முடியாது ஒண்ணுமில்லை.


வெற்றி பெற்றவர்வகளெல்லாம் என்ன குணங்களால் சாதனை படைத் தவர்கள் என்று தெரிந்து கொண்டால் நாமும் அதே குணங்களைப் பின்பற்றலாம். அதே வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

அதே போலத்தான் ஒரு நாட்டின் விஷயமும், ஜப்பானும் அமெரிக்காவும் ஸ்வீடனும் எப்படி முன்னேறி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு நாமும் அந்த சில அணுகுமுறைகளை திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

முதலில் நமக்கு படிக்கும் ஆர்வம், தெரிந்து கொள்ளும் துடிப்பு அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்று புரிந்து கொள்ளும் கூர்மை வேண்டும்.

அடுத்ததாக அந்த குணங்களை நாம் நம் வாழ்வில் நமக்கேற்ற சூழ்நிலையில் எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.

வெற்றி தரும் குணங்களைப் பற்றிய சிந்தனை, சாதனை புரிந்தவர்களின் தன்மை களைப் பற்றிய சிந்தனை, சாதனை புரிந்தவர் களின் தன்மைகளைப் பற்றிய நினைவுகள் சதா நம் மனதில் இருக்க வேண்டும். இதைத்தான் (Awareness) விழிப்புணர்வு என்று சொல்வார்கள்.

விழிப்புணர்வுக்கு முக்கியமான ஐந்து குணங்களை மனோபாவங்களை நாம் குறிப்பிட முடியும். இவைதான் அவர்களது சாதனைகளுக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றன.

1. பெரிய விஷயங்களில் ஈடுபாடு

2. மாற்றங்களை உண்டாக்குதல்

3. தோல்வியை சமாளிக்கும் இயல்பு

4. எது முக்கியம் என்ற தெளிவு

5. வாழ்வில் ஒரு நிறைவு

மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கப்பலோட்டிய சிதம்பரனாரை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவிய திரு. ஏக்நாத்ரானடே அவர்களை நினைத்துப் பாருங்கள் அல்லது ஒரு பெரிய ஏஜென்சி வியாபாரம் மட்டுமே செய்த பெருந்தொழில் அனுபமில்லாத ஸ்பிக் உரத் தொழிற்சாலையை நிறுவிய எம். ஏ சிதம்பரத்தை எண்ணிப்பாருங்கள்.

இவர்கள் பெரும்பாலும் அதிகம் பேசமாட்டார்கள் ஆனால் உயர்வு பெறுவதற் குரிய எண்ணங்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும்.


அவர்கள் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். எடுத்த லட்சியமும் அதிலுள்ள ஈடுபாடும் அந்த லட்சியத்தின் கனவும் பெருமையும் இவர்களையும் உயர்த்தி விடுகிறது இதுதான் லட்சியம் தரும் வலிமை.

மனித சமுதாயம் செல்ல வேண்டிய திசையை இவர்கள் சரியாக கணிக்கிறார்கள்.

பலருடைய வாழ்வுமே திட்டமிட்டோ அல்லது எதிர்பாராமலோ மாற்றங்கள் நிகழ்கின்றன.

சாதனை புரிபவர்கள் அந்த மாற்றங்களை விரும்பி வரவேற்று அவற்றைப் பயனுள்ளவை களாக மாற்றிக் கொள்கிறார்கள். தடைக் கல்லைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி உயர்கிறார்கள்.

தோல்வி இல்லாத வாழ்க்கையே இல்லை. தோல்வி, ஏமாற்றம் எல்லாம் ஏற்படுவது சகஜம்தான்.

ஆனால் தோல்வியை வெற்றி பெற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள். வெற்றிப் பாதையைக் கண்டவர்கள் தாங்கள் தோற்றதாக அதிகம் கருதுவதில்லை. நாமும் வெற்றி பெற்றவர்களாக மாறலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.



| Leave a Comment |