தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

பெண்களுக்கு தேவை : துணிச்சலும் தன்னம்பிக்கையும்




பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் வேண்டும், இந்த கருத்தை வலியுறுத்தி சமீபத்தில் இந்தி படம் வெளிவந்துள்ளது.ராணி முகர்ஜி நடித்த அந்த திரைப்பட ம்,சமீபகாலமாக பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான கொடுமைகளை ஒழிப்பதற்கான கருத்துக்களை உள்ளடக்கியது.எனவே பெண்களுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் தேவை.இந்தக் கருத்தை மையமாக வைத்து இந்த இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த படம் பெண்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள துணிச்சல் தன்னம்பிக்கை பெறுவது போன்ற விஷயங்களை எடுத்து சொல்கின்றன.சினிமா,பத்திரிகை,வானொலி போன்ற ஊடகங்கள் மூலம் தன்னம்பிக்கை கருத்துகள் இளைஞர்களிடம் விரைந்து சென்றடையும்.


நீங்கள் தண்ணீரை பல இடங்களில் பார்த்து இருப்பீர்கள் .கண்மாயில், குளத்தில், கிணற்றில்,நீரோடையில் சுழன்று செல்லும் ஆற்று வெள்ளம் போன்றவை.எல்லா இடங்களிலும் ஒரே தண்ணீர் தான்,ஆனால் தண்ணீரின் ஆக்ரோசத்தை ,சீறிப்பாயும் அருவியில் பார்க்கலாம்.பல இடங்கில் தூங்குவது போல் உள்ள இந்த நீருக்கு இவ்வளவு வலிமை எங்கிருந்து வந்தது என்று எப்பவாவது நாம் சிந்தித்து பார்த்து இருக்கிறோமா ?அது போல் தான் உறங்கிக்கொண்டு இருக்கும் தனி மனிதனுக்கு தன்னம்பிக்கை என்ற கருத்து எழுச்சி பெற்று அவர்களது இலட்சியத்தை அவர்கள் எட்டிப்பிடிக்கும் வரை யாரும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.நீரோடையில் சீறிப்பாய்ந்து செல்லும் நீர் ஓரிடத்தில் சென்று பின் அமைதி அடைகிறதோ அது போன்று ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் அந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள் .அவர்கள் வெற்றி பெற்ற பின்னரே அமைதி பெறுவார்கள்.

வாழ்க்கையில் கிடைக்கும் தோல்விகளை தன்னம்பிக்கை மிக்க படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி பெறுவதும் ஒரு சாதனைதான்.சமீபத்தில் மதுரா என்ற பெண் ,பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க இயலவில்லை.இருந்தாலும் தன்னம்பிக்கை மிக்கவரான இவர், வயல் வேலைகளுக்கு சென்று விட்டு பின்னர் தனது தோழிகளின் புத்தகங்களை இரவல் பெற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே படித்து பிளஸ் டூ வெற்றி பெற்றுள்ளார். அதன் பின்னர் பல துறைகளில் தேர்ச்சி பெற்று உள்ளார்.இதற்கு காரணம் வறுமை ஒருபுறம் இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற துணிச்சலும் தன்னம்பிக்கையும் தான் காரணம் என்றால் மிகையில்லை.

ஒவ்வொரு கால கட்டடத்திலும் வெற்றி பெற நல்ல தன்னம்பிக்கை உள்ள உணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.நமது நாட்டில் சிறு வயது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை கருத்துக்களை எடுத்துச்சொல்லி ,அவர்களை மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக வளர்க்க வேண்டும். படிப்பு ,விளையாட்டு போன்றவற்றுடன் தன்னம்பிக்கை கருத்துகளை அவர்களின் வாழ்வின் பல நிலைகளில்இருந்தே அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.படிப்பு, விளையாட்டு எனஅவர்கள் செய்யும் செயல் எதையும் ஆழ்ந்து,கூர்ந்து செயல் படுத்தும் முறைகளில் தன்னம்பிக்கை கருத்துக்களை தூவி அவர்களது உணர்வுகில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.


| Leave a Comment |